காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்
தினமும் 200 டன் மீன் விற்பனைக்கு வருகிறது . காசிமேடு மீன்பிடி துறை முகத்தின் அருகே , விசைப்படகு கட்டும் தளம் உள்ளது . இந்த தளத்தைச் சுற்றி உடைந்த படகுகள் , பிளாஸ்டிக் , மரத்துண் டுகள் உள்ளிட்ட கழிவுகள் மலை போல குவிக்கப்பட்டுள்ளன .
அத்துடன் பராமரிப்பின்றி மோசமான நிலையில் இப்பகுதி உள்ளதால் , கடும் துர்நாற்றம் வீசுகிறது . காசிமேடு கடல் பகுதியிலும் குப்பை , பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக மிதக்கின்றன .
இவ்வாறு , தொடர்ந்து கடலில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பையும் அதிகரித்து வருவதால் , மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர் .
இது குறித்து மீனவர்கள் கூறியது : காசிமேடு கடற்கரை செல்லும் வழியெங்கும் குப்பைக் குவியலும் பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைந்துள்ளன . கடலிலும் , கழிவுப் பொருட்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் உள்ளன .
இதனால் , மீன் பிடிக்கும் போது விசைப்படகுகள் கவிழும் நிலை ஏற்படுகிறது .
மீன் பிடிக்கும் வலைகளில் சில நேரங்களில் , பிளாஸ்டிக் மற்றும் குப்பை மாட்டிக் கொள்ளும் .
கடந்த ஒரு வாரமாக குப்பை மற்றும் கழி வுப் பொருட்களின் அளவு அதிக ரித்துள்ளது . கடல் மாசு , சுற்றுப் புறசூழலுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால் .
கடலில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்ற , அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கூறினர் .
சி.திவ்யதர்ஷினி