தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களில் ஒருவரான சோ.தர்மனுக்கு சூல் என்னும் நாவலுக்காக இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த இவர் 1953ல் பிறந்துள்ளார். பஞ்சாலைச் தொழிலாளியாக இருந்த தர்மராஜ் என்னும் இவர் 1980க்குப் பிறகு சிறுகதை மூலமாக எழுத்துலகில் அடியெடுத்து வைத்து தர்மன் ஆனார்.பகுதி நேர விவசாயியாகவும் திகழ்ந்தார்.
இவரது தூர்வை நாவல் கரிசல் கிராம வாழ்வியலை பதிய வைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அண்மையில் தர்மனுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விருது வழங்கப்பட்டது. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள சூல் நாவல் நீர் மேலாண்மை பற்றியும் விவசாயிகளின் வாழ்வு பற்றியும் ஆழமான கருத்துக்களை பதிய வைத்து விருதை தட்டிச்சென்றுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.