சென்னை
சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகும். கடந்த அதிமுக கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது தொட்டாலே உதிரும் நிலையில் உள்ளன. இது குறித்து சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
அதையடுத்து அரசு அதிகாரிகள் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்தனர். ரூ.250 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்று இருப்பது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் 2 பொறியாளர்களை இன்று பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.