கடும் கனமழை எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழகத்தில் தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில்அங்கங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் மட்டும் தற்போது 160 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.