தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னையில் மின்சார ரயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனம்ழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதற்கிடையில், கனமழை காரணமாக சென்னையில் இன்று மின்சார ரெயில் இயங்குமா? என்று பயணிகளிடையே குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில், சென்னையில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையிலும் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல சென்னையில் மெட்ரோ ரயில் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.