பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று செயல்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றாலும் மக்கள் பலர் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற இயலாமால் பெரும் அலைச்சலுக்கு உள்ளானார்கள். இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்நிலையில் இன்று பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5ம் ஆண்டில் நெட்டிசன்கள் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட துன்பங்களை பதிவிட்டு இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள் என பொருள் கொள்ளும் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.