செம்பரம்பாக்கம்:-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் கடல் போல காட்சியளிக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போதைய உயரம் 16 புள்ளி 9 அடியாகவும், 1900 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக நாள்தோறும் ஏரியில் இருந்து 32 கனஅடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவ்வப்போது பெய்த மழையாலும், கிருஷ்ணா நதி நீர் தொடர்ந்து வருவதால் தற்போது ஏரி முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
ஒருவகையில் ஏரி நிரம்பியது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களை எண்ணி சென்னை மக்கள் சற்று பீதியில்தான் உள்ளனர்.