தமிழகம்

நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலம்: 

தேர்தல் பிரசாரத்தை நாளை துவங்க உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை முடித்த பின்னர், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,அதில் “லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார்.GPS பொருத்தும் திட்டம் மத்திய அரசு கொண்டு வந்தது. தரமான நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்க வேண்டும். இங்குதான் வாங்க வேண்டும் என நிர்பந்தப்படுத்தவில்லை. கேஸ்விலையை குறைக்கக்கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன். லோக்சபா தேர்தலின் போது, இருந்த கட்சிகளுடன் கூட்டணி தொடரும். அதிமுகவை பொறுத்தவரை, எங்கள் கூட்டணியில் தான் பா.ஜ.க தொடரும்.

ALSO READ  அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை:

மின்சாரத்துறை தனியார் மய்யம் செய்யப்படாது.தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால் நாளை நங்கவள்ளி, ஒன்றியத்தில் சென்றாய பெருமாள் ஆலையத்தில் வழிபாடு முடித்துவிட்டு எடப்பாடி சட்டசபை தொகுதியில் உள்ள பெரிய சோரகை பகுதியில் பிரசாரத்தை துவங்க இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சடலமாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட அக்கா,தங்கை…..அதிர்ந்த பெற்றார்….

naveen santhakumar

அவ்வை சண்முகிக்கு தர்ம அடி- பெண் வேடமிட்டு கொண்டையை மறைக்க மறந்து மாட்டியவர்!

naveen santhakumar

கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் போடுங்க ரூ.1,000 பரிசு அள்ளுங்க !

News Editor