தமிழகம்

மாநகராட்சி ஊழியர்களின் சிறப்பான வேலை; முகம் சுளிக்கும் பொதுமக்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரை அழகு படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் செடிகள் நட்டு வைத்து இவைகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க மாநகராட்சி ஏற்பாடுகள் செய்திருந்தது.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்திருந்தது.

இந்த ஊரடங்கில் மாநகராட்சி சார்பில் நட்டு வைக்கப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய ஊழியர்கள் தண்ணீர் ஊற்றாமல் கொரோனா ஊரடங்கில்  தங்களின் இருசக்கர வாகனத்திற்கு தண்ணீர் ஊற்றி கழுவி கொண்டிருந்தனர்.

ALSO READ  நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி; விவசாய சங்க தலைவர் அறிவிப்பு !

வெயிலில் தண்ணீரின்றி கருகும் மரத்திற்கு தண்ணீர் ஊற்றாமல் அந்த தண்ணீரில் அவர்களது சொந்த இருசக்கர வாகனத்தை கழுவிக் கொண்டிருந்த மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயல் அப்குதியை கடந்து செல்பவரை முகம் சுளிக்க வைத்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறுமியின் வயிற்றில் அரை கிலோ முடி அதிர்ந்து போன மருத்துவர்கள்

Admin

கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் அளித்த நளினி !

News Editor

முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்பி ஜாமீன் -நீதிபதி கோபிநாதன் உத்தரவு!

News Editor