மாமியார் வீட்டிற்கு போன மருமகளுக்கு இப்படி நடக்கலமா..சோகத்தில் குடும்பம்
தாய் வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் ,ஜீவிதா தம்பதியினருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.இந்நிலையில் ஜீவிதா கர்பம் அடைந்துள்ளாள், ஆனால் குழந்தையின் வளர்ச்சி சரி இல்லாததால் கரு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் தனது தாயார் வீட்டில் 2 மாதங்களாக வீட்டிற்கு வந்த ஜீவிதா, தனது மாமியார் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இரவு வீட்டில் உறங்கிய ஜீவிதா அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.காவல்துறையினர் ஜீவிதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் ஜீவிதாவின் தாயார் எனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.