தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும்
நாளைமுதல் ஜன.1 வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவி்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூரில் இஸ்லாமியர்கள் 7,000 பேர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 2,000 பேரும் மதுரை திருமங்கலத்தில் 1000 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், உளுந்தூர்பேட்டையில் 500 இஸ்லாமியர்களும், சென்னை செங்குன்றத்தில் 300 பேரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.