சென்னை:
தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு மணி நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தி.நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேர கட்டுப்பாட்டை தாண்டி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும்,தீபாவளியையொட்டி, தியாகராய நகரில் 100 CCTV கேமராக்கள், 500 போலீசார் கூடுதலாக போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.