தமிழகம்

வாழ்வா சாவா நேரத்தில் இது மட்டும் அவசியமா?? சர்ச்சையில் சிக்கிய திமுக தலைவர் ஸ்டாலின்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனாவால் மக்கள் வாழ்வா? சாவா? என்ற பீதியில் உறைந்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் புதிதாக விக் ஒன்றை வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இது பெரும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, என்ன செய்தாலும், அதை விமர்சிப்பது, முதல்வரோ மற்ற அமைச்சர்களோ என்ன கருத்து சொன்னாலும் அதையும் விமர்சித்து வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். 

கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்ற கேள்விக்கு, முதல்வர் பழனிசாமி, கடவுளுக்குத்தான் தெரியும் என்று பதிலளித்தார். கடவுள் மீது பழியையும் பாரத்தையும் இறக்க எடப்பாடி அரசு முயற்சிப்பதாக மிக கடுமையாக விமர்சித்திருந்தார் ஸ்டாலின். 

கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்கியதில் முறைகேடு என்று மக்களின் உயிரைப்பற்றி கவலைப்படாமல் பேரிடர் காலத்திலும் ஊழல் செய்வதிலேயே எடப்பாடி அரசு கவனம் செலுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். 

ALSO READ  உதகையில் நிலச்சரிவு - ரயில் சேவை இன்று ரத்து..

மக்களின் மீது கவலைப்படாமல் பேரிடர் காலத்திலும் ஊழல் செய்வதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மக்கள் வாழ்வா சாவா என்ற பீதியில் உறைந்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் புதிதாக விக் ஒன்றை வைத்துள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மக்கள் மீது அக்கறை உள்ள ஒரு தலைவர் செய்யும் வேலையா இது..? உடற்தோற்றத்துக்கும் இளமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நேரமா இது..? இக்கட்டான நேரத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் செய்யும் காரியமா இது..? பேரிடர் காலத்திலும் ஊழல் செய்வதாக அதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின், பேரிடர் காலத்தில் புதிய ’விக்’மட்டும் வைத்துக்கொள்ளலாமா..? இது போன்ற தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆளுங்கட்சியை விமர்சிக்க என்ன தகுதியிருக்கிறது..? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை, விமர்சனங்களையும் பொதுமக்களும் அரசியல் விமர்சகர்களும், எதிர்க்கட்சியினரும் முன்வைக்கின்றனர்.

ALSO READ  திமுக பிரமுகரிடம் கொல்லையடித்த மர்ம நபர் கைது !

அரசியல் வெற்றி வியூகவகுப்பாளர் என்று கூறப்படும் பிரசாந்த் கிஷோர் தான் ஸ்டாலினின் இந்த புதிய தோற்றத்தை காரணம் என்று கூறப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினோடு தற்போது பிரசாந்த் கிஷோரும் சேர்ந்தே விமர்சிக்கப்படுகிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விழுந்துச்சு கல்….அடிக்குது ஷாக்…..

naveen santhakumar

கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை

News Editor

துவக்கப் பள்ளிகள் மற்றும் நடு நிலை பள்ளிகள் திறப்பது குறித்து செப்.,8க்கு பின்பு முடிவு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

News Editor