தமிழகம்

சென்னை – திருப்பதி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரெயில் இயக்கம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்று முதல் சென்னை – திருப்பதி இடையே முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

கொரோனா பொது முடக்கத்தால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினா் இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று தொடா்ந்து ரெயில்வே நிா்வாகத்துக்கு மனு அனுப்பினா். இதனையடுத்து தெற்கு ரெயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மின்சார ரெயில் நீட்டிப்பு செய்யப்பட்டு சென்னை – திருப்பதி இடையே முன்பதிவில்லா விரைவு ரெயிலாக இன்று முதல் இயக்கப்படும் எனவும் இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்குப் புறப்பட்டு திருப்பதியை பிற்பகல் சென்றடையும். பின்னர் திருப்பதியில் இருந்து பிற்பகல் புறப்பட்டு இந்த ரயில் சென்னையை மாலை 5.15 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயில் பேசின் பிரிட்ஜ், பெரம்பூா், வில்லிவாக்கம், அம்பத்தூா், திருநின்றவூா், திருவள்ளூா், கடம்பத்தூா், திருவாலங்காடு, அரக்கோணம், திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புத்தூா், ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் ரெயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

VAO-க்கு லஞ்சம் தருவதற்காக பிச்சை எடுத்த மூதாட்டி:

naveen santhakumar

நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன்?

Shanthi

கள்ளக்குறிச்சி சம்பவம் – அரசின் உத்தரவை மீறிய பள்ளிகள்…

Shanthi