தமிழகம்

“டெல்லி கலவரம்” குறித்து மத்திய அரசை கடுமையாக கண்டித்த ரஜினிகாந்த்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி போராட்ட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் உள்ள மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் கடைகள்,கார்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இந்த வன்முறையில் இதுவரை உளவுத்துறை அதிகாரி, தலைமை காவலர் உட்பட 24 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ALSO READ  'அவரு சாகல' - மயங்கி கிடந்த இளைஞர்- தோளில் சுமந்த பெண் ஆய்வாளர்

டெல்லி வன்முறை மத்திய அரசின் தோல்வியாக கருதுவதாகவும், இதனை இரும்புக்கரம் கொண்டுய் அடக்கிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் வன்முறையை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தின் பெரும் பிரச்சனையாக மாறும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், டிரம்ப் போன்ற தலைவர்கள் வந்த நேரத்தில் போராட்டத்தை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கடுமையாக கண்டிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் மருத்துவர் திடீர் மரணம்…

naveen santhakumar

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 வீடுகள் தரைமட்டம்!

naveen santhakumar

70 பெண்கள்..ஆபாச வீடியோ..நாகர்கோவில் காசி.. பகீர் தகவல்கள்.

naveen santhakumar