தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மும்பையில் 5 ரூபாய்க்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அருகேயுள்ள போரிவேலி பகுதியில் ராம்துலார் என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அருகேயுள்ள எரிவாயு நிரப்பும் நிலையத்திற்கு சென்றுள்ளார். தனது மகனையும் அங்கு வருமாறு அழைத்துள்ளார்.
எரிவாயு நிலையத்தில் 500 ரூபாய் கொடுத்து ரூ. 205க்கு எரிவாயு நிரப்ப, மீதமுள்ள தொகையில் 5 ரூபாய் குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியரான சந்தோஷிடம் 5 ரூபாய் கேட்க, அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடிந்தது.
ராம்துலார், அவரது மகனை எரிவாயு நிலைய ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதில் ஆட்டோ ஓட்டுநர் ராம்துலார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 ஊழியர்கலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.