தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடத்தில் முடிவுகளைத் தரும் Rapid RT-PCR பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை தனியார் மூலம் இந்திய விமான நிலைய ஆணையம் செய்து வருகிறது. அதற்காக கட்டணமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதை அவசரமாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.600 குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. இதன் காரணமாக பரிசோதனை கட்டணம் ரூ.3400ஆக குறைக்கப்பட்டுள்ளது. இனி பயணிகள் குறைக்கப்பட்ட கட்டணத்திலே பரிசோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. -சா.கற்பகவிக்னேஷ்வரன்
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.