தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பணியிடங்களுக்கு திரும்புவோர் ஜனவரி 16ம் தேதி பேருந்து முன்பதிவு செய்திருந்தால் அதற்கான கட்டணம் 2 தினங்களில் திருப்பிக்கொடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் பேருந்துகள் இயங்காது. எனவே 16ம் தேதி சொந்த ஊரில் இருந்து பணியிடங்களுக்கு திரும்ப முன்பதிவு செய்தவர்களது கட்டணம் இரண்டு தினங்களில் திரும்பிக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டணத்தை திரும்ப பெற விரும்பாதவர்கள் 16ம் தேதிக்கு பதிலாக மாற்று தேதியில் பேருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.