சிவகங்கை மாவட்டத்தில் கீழடி துாத்துக்குடி ஆதிச்சநல்லூர் , சிவகளை மற்றும் கொற்கை ; ஈரோடு – கொடுமணல் ; கிருஷ்ணகிரி – மயிலாடும்பாறை ; அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஏழு இடங்களில் , தமிழக தொல்லியல் துறை சார்பில் , கடந்த மார்ச்சில் அகழாய்வு பணிகள் துவங்கின.
கீழடியைப் பொறுத்த வரை ஏற்கனவே ஆறு கட்ட அகழாய்வுகள் முடிந்த நிலையில் , தற்போது நாம் கட்ட அகழாய்வு நடக்கிறது . இதில் , மவுரியர் காலத்துக்கு முன்பான வெள்ளிக்காசு , சுடுமண்ணால் செய்யப்பட்ட துணியில் உள்ள வடிவமைப்பு செய்ய, உதவும் முத்திரை , இரும்பு ஆணி , கத்தி , விலையு யர்ந்த மணிகள் , காதில் அணியும் தங்க வளையம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன .
கீழடிக்கு அருகில் அகரத்தில் , ஐந்து உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன . அவற்றில் , அதிகபட்சம் 12 அடுக்குகள் உள்ளன . இங்கு , சங்க காலத்தைச் சேர்ந்த சங்கு மணிகள் , வளையல்கள் , கண்ணாடி மணிகள் , முன்கற்கருவிகள் , நூல் நூற்கும் தக்களி , நீர் வார்க்கும் மூக்கு கெண்டி , செப்பு காசுகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன .
கொந்தகையில் கறுப்பு , சிவப்பு நிற ஈமத் தாழிகள் கிடைத்துள்ளன . இதேபோல் மற்ற ஊர்களிலும் பல பொருட்கள் கிடைத்துள்ளன.