ஆத்மயோகா பவுண்டேசன் என்ற பெயரில் அறிவியல் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தி வருபவர் ஆசான்ஜி.
அண்மையில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் எளிய வழிமுறை நம்மிடம் இருப்பதாகக் கூறி பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
ஈரத்தால் தான் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகள் பரவுவதாகவும், எனவே சாம்பிராணி புகை போட்டால் அந்த கிருமிகள் அழிந்துவிடும் என்றும் கூறி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டுவிட்டாரில் வைரலானது.
இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சாம்பிராணி புகையால், கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்த முடியும் என்ற எந்த ஒரு ஆய்வு முடிவுகளுமே இல்லை. இது மக்களை தவறான வழிக்கு தூண்டும், அதோடு சாம்பிராணி மூச்சுத்தினறலை ஏற்படுத்துவதோடு கிருமி பரவலையும் அதிகரித்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.