தமிழகம்

சாம்பிராணி புகை போட்டு கொரோனாவை தடுக்கும் ஆசான்ஜி- மருத்துவர்கள் எச்சரிக்கை …

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆத்மயோகா பவுண்டேசன் என்ற பெயரில் அறிவியல் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தி வருபவர் ஆசான்ஜி.

அண்மையில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் எளிய வழிமுறை நம்மிடம் இருப்பதாகக் கூறி பேட்டி ஒன்று அளித்திருந்தார். 

ஈரத்தால் தான் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகள் பரவுவதாகவும், எனவே சாம்பிராணி புகை போட்டால் அந்த கிருமிகள் அழிந்துவிடும் என்றும் கூறி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டுவிட்டாரில் வைரலானது.

ALSO READ  மத்திய கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று ! 

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சாம்பிராணி புகையால், கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்த முடியும் என்ற எந்த ஒரு ஆய்வு முடிவுகளுமே இல்லை. இது மக்களை தவறான வழிக்கு தூண்டும், அதோடு சாம்பிராணி மூச்சுத்தினறலை ஏற்படுத்துவதோடு கிருமி பரவலையும் அதிகரித்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதிய கல்விக் கொள்கையை புறக்கணித்த தமிழகம் !  

News Editor

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

News Editor

அரசு உத்தரவிட்டால் பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் 15 நாட்கள் கடைகளை அடைக்க தயார்- வணிகர் சங்கப் பேரவை… 

naveen santhakumar