தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல்முறையாக இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங் கில் நேற்று நடந்தது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 10 பயனாளிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கினார். இத்திட்டம் ரூ.3,025 கோடியில் செயல் படுத்தப்பட உள்ளது.
புதிய இணைப்பு பெற்றுள்ளவர்கள், மின்சாரத்தை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள். மின் தயாரிப்பு என்பதே மிகப்பெரிய செலவு வைக்கும் திட்டமாக உள்ளதால், முடிந்த அளவு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.