பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மாமனாரை மறுத்ததால் காம வெறியன் மருமகளை வெட்டிக்கொன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
சேலம் மாவட்டம் தம்பட்டம் அருகே உள்ள உலிபுரம் நரிகரடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் பழனி.. இவருக்கு 63 வயதாகிறது.அறிவழகன் என்ற மகன் உள்ளார். இவரது மனைவி அமுதா.40 வயதாகிறது.இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்..
அறிவழகன், கூட்டுறவு நிறுவனத்தில் உர விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆனாலும் மாமனாருக்கு அமுதா மேல் ஆசை இருந்திருக்கிறது.பலமுறை தவறான கண்ணோட்டத்திலும் பார்த்து வந்துள்ளார்..
இந்நிலையில் அறிவழகன் வழக்கம்போல் வேலைக்கு போய்விட்டார்… வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருந்ததை அறிந்த பழனி, மருமகளை வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபடுத்த முயன்றுள்ளார்..அமுதா அதற்கு பலமாக எதிர்ப்பு தெரிவிக்கவும், அடித்து அமுதாவை துன்புறுத்தியும் உள்ளார்.ஆனால் கடைசிவரை அமுதா மாமனாருடன் போராடினார்.
இதை பார்த்து டென்ஷன் ஆகிவிட்ட பழனி, பக்கத்தில் இருந்த கோடாரியை எடுத்து சரமாரியாக அமுதாவை வெட்டி விட்டார்… இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பிறகு பழனி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அமுதாவின் அலறலை கேட்டு வந்தஅக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட அமுதாவின் சடலத்தை மீட்டு பழனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.