தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 91 ஆயிரத்து 959 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 046 ஆகும். இதில் 23 ஆயிரத்து 459 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 91 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 963 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6 லட்சத்து 25 ஆயிரத்து 988 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்து 36 ஆயிரத்து 986 ஆக உள்ளது.
இன்று கொரோனா தொற்றினால் 26 பேர் உயிரிழந்தனர். 11 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 15 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 14,496 பேருக்குத் தொற்று உள்ளது