தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… கார், பைக், கறவை மாடு வென்ற வீரர்கள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றுள்ளார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலகலமாக நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 7 சுற்றுகளாக நடைபெற்ற இந்த 652 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 294 வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற 20 வயதான இளைஞர் 24 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 19 காளைகளை பிடித்து வலையங்குளத்தைச் சேர்ந்த முருகன் இரண்டாமிடமும், 12 காளைகளை அடக்கி விளாங்குடி பாரத்குமார் மூன்றாமிடம் பிடித்தனர்.

முதலிடம் பெற்ற மாடுபிடிவீரர் கார்த்திக்குக்கு காரும், இரண்டாமிடம் பெற்ற முருகனுக்கு டூவீலரும், மூன்றாமிடம் பெற்ற பாரத்குமாருக்கு பசும் கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.


Share
ALSO READ  அடுத்ததாக கைலாசாவில்….. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க கோரி மனு:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண் காவலர் பாலியல் புகார்; கூடுதல் எஸ்.பி பணியிடை நீக்கம்…!

naveen santhakumar

தமிழகத்தில் தேர்தல் எப்போது : தேர்தல் அதிகாரி பேட்டி..!

News Editor

காரைக்குடியில் பச்சிளங் குழந்தையை புதரில் வீசிய தாய்

Admin