நீட் தேர்வால் தங்களது உயிர்களை இழக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக நடிகர் சூர்யா தனது குரலை எழுப்பினார். அந்த கருத்தை பல அரசியல்வாதிகள் எதிர்த்தனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரான அர்ஜுன் சம்பத் “நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யா நீதிமன்றத்தை அவமதிக்குமாறு பேசியுள்ளார்.சூர்யாவை செருப்பால் அடிப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்” எனவும் கூறினார்.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் “என்னை செருப்பால் அடிப்பதால் ரூ.1லட்சம் கிடைக்கும் என்றால், அந்த வாய்ப்பை ஏழை மாணவர்களுக்கு வழங்க தயார் ” என சூர்யா கூறியுள்ளார்.
இது தான் அந்த கேவலமான பேச்சுக்கு சரியான பதிலடி என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இதனிடையே மறுப்பு தெரிவிக்கும் வகையில் “நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் தருவதாக தான் கூறவில்லை” என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.