தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை
சென்னை நேப்பியர் பாலம் அருகே 42 அடி உயரம் கொண்ட 75வது சுதந்திர தின நினைவுத் தூணை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 42 அடி உயரம் கொண்ட இந்த தூண் துருப்பிடிக்காத உலோகத்தால் உருவாக்கப்பட்டது.
1.95 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நினைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. நினைவுத்தூணில் 5 அடி உயரத்தில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம், 8 அடி உயர அசோக சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களைப் போற்றும் விதமாக 4 ராணுவ வீரர்களின் சிலைகள் நினைவு தூணைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.