தமிழகம்

மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாப பலி- டிக்-டாக்கால் விபரீதம்..?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஓசூர்:-

கிருஷ்ணகிரியில் டிக்டாக் செய்வதற்காக மீனை உயிருடன் விழுங்க முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், காளேகுண்டா பார்வதி நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகன் வெற்றிவேல் (22). கட்டிட மேஸ்திரியாக பணிபுரியும் இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தையும் உள்ளது. நேற்று முன் தினம் வெற்றிவேள் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.

ALSO READ  தஞ்சை to மதுரை வரை 200 கிமீ ஊரடங்கு என்றும் பாராமல் தனது காதலனை பார்க்க நடந்தே சென்று கொண்டிருக்கும் பெண்......

அப்போது அவர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிக்டாக் வீடியோ செய்வதில் நாட்டமுடைய அவர், பிடித்த மீனில் ஒன்றை எடுத்து அப்படியே விழுங்கி டிக்டாக் செய்ய முயன்றுள்ளார். அப்போது மீன் சுவாச குழாயில் சிக்கி மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, வழக்குப்பதிவு செய்த ஓசூர் டவுன் போலீசார் வெற்றிவேல் குடிபோதையில் மீனை விழுங்கினாரா அல்லது நண்பர்களுடன் பந்தயத்திற்காக, டிக்-டாக் செய்தபோது இவ்வாறு நடந்ததா என, விசாரித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் குழந்தையின் சாட்சியம் மட்டுமே போதுமானது : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor

பொறியியல் பட்டப்படிப்பு முதல் செமஸ்டர் மாணவர்களுக்கு நவம்பர்-23-ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்:

naveen santhakumar

துப்பாக்கியை பயன்படுத்த போலீசார் தயங்கக்கூடாது – டி.ஜி.பி.சைலேந்திர பாபு

naveen santhakumar