தமிழகம்

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா தொற்று காரணமாக  தற்போது நடைபெறும் முதலமைச்சர், மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் சந்திப்பில் தங்கமணி கலந்து கொள்ளவில்லை.  நாமக்கல்லில் உள்ள தங்கமணியின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

ALSO READ  செங்கல் சூளைகள் இயங்க தடை; மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் !

நேற்று முன் தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஐவர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உள்ளிடோரும் கலந்துகொண்டனர்.

நேற்று முதல்வரை சந்தித்த அமைச்சர் தங்கமணி, மின்விசை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலையை கொரோனா நிவாரணமாக வழங்கிய நிலையில், இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா பரவல் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம்- தேவசம் போர்டு.....

ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெறும் பத்தே பைசா….சூடான….. சுவையான பிரியாணி….முந்துபவர்களுக்கே முன்னுரிமை….

naveen santhakumar

நவம்பர் 1ம் தேதி விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு !

naveen santhakumar

கரிசல் குயில் கி.ராவின் மறைவுக்கு முதலவர் ஸ்டாலின் இரங்கல் !

News Editor