தமிழகம்

வெறும் பத்தே பைசா….சூடான….. சுவையான பிரியாணி….முந்துபவர்களுக்கே முன்னுரிமை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி:

திருச்சியில் 10 பைசாவிற்கு வழங்கப்பட்ட பிரியாணியை வாங்க, கொரோனா அச்சத்தையும் மறந்து ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருச்சியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் 10 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையறிந்த 500-க்கும் மேற்பட்டோர், கொரோனா அச்சத்தையும் மறந்து அதிகாலை 5 மணி முதலே கடை வாசலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது முதலில் வந்த 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ALSO READ  ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள்; பரபரப்பை கிளப்பிய தூத்துக்குடி துறைமுகம் !

இதனையடுத்து 10 பைசா நாணயங்களை வழங்கி, அவர்கள் பிரியாணியை பெற்றுச் சென்றனர்.இந்நிலையில், பின்னால் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். விளம்பரம் கொடுக்கும் போது 100 பேருக்கு வழங்குவதாக மிக சிறியதாக எழுதி வைத்ததால் தங்களுக்கு தெரியவில்லை என்று கூறிய அவர்கள் 10 பைசா நாணயத்துடன் வரும் அனைவருக்கும் பிரியாணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில்,”பழங்கால நாணயங்களை ஊக்குவிக்கும் விதமாகவும், உலக உணவு தினத்தை கொண்டாடும் விதமாகவும் 100 பேருக்கு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்தார். ஆனால், இவ்வளவு பேர் வருவார்கள் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய அவர், அடுத்த முறை நிறைய பேருக்கு பிரியாணி வழங்க ஏற்பாடு செய்வோம்” என தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

க.அன்பழகன் கடந்து வந்த பாதை….

naveen santhakumar

16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை….செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு….முதல்வர்…

naveen santhakumar

டாஸ்மாக்கில் இன்று முதல் விலை உயர்வு

Admin