சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் இயங்கி வரும் கொரோனா பெருந்தொற்று கட்டளை மையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்க இந்த கட்டளை மையம் பெரிய அளவில் உதவியாக உள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் இதுபோன்ற ஒரு கட்டளை மையம் உருவாக்கி டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தோடு ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அறிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரிசோதனை எடுத்தால் கொரோனா மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக 30 ஆயிரங்கள் தயார் நிலையில் வைத்து வழங்கி வருகிறோம். மேலும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை கட்டாயம் வீடுகளில் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
கொரோனா பரிசோதனை எடுத்து வீடுகளில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமை படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்த அவர், இதன் மூலம் சென்னையில் கொரோனா பரவல் தொற்று குறையும் என நம்பிக்கை உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.