இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் அங்கமாகவே மாறிவிட்டது. இவை நம் வாழ்வை நமக்கே தெரியாமல் நம்மிடம் இருந்து பறித்து கொண்டு விட்டது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் தாக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் சீர்கெட்டு திரிகிறார்கள். இவர்கள் மத்தியில் வாட்ஸ் அப், பேஸ்புக்கை விட டிக் டாக் மோகம் அதிகரித்து வருகிறது.
இதில் என்ன பதிவிடுவது கூடாது என்ற வரைமுறையே இல்லாமல் அனைவரும் அனைத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பள்ளி மாணவன் ஒருவன் பள்ளி சீருடையில் சக மாணவி ஒருவரின் கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து செயினை அணிவிக்கிறார். அதற்கு அந்த மாணவியும் வெட்கப்பட்டு சிரிக்கிறார்.
இந்த, 22 விநாடிகள் ஓடும் வீடியோ பார்க்கும் அனைவரையும் அதிர வைக்கிறது. என்ன செய்கிறோம், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற புரிதல் துளியும் இல்லாமல் தான்தோன்றியாய் சுற்றி திரியும் இது போன்ற மாணவ மாணவிகளை பெற்றோர் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.