ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் 12 மணி நேரத்திற்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தமல்லியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். கடந்த 15ம் தேதி அங்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கபட்டு திருவள்ளூர், நேமம், பூந்தமல்லியில் உள்ள அரசு சுற்றியுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் குறித்த நிலையை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விடுதியில் இருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் வெளியில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சுமார் 16மணி நேரத்திற்கும் போராட்டம் நடைபெற்றதால் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்மித்தது.
போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் போராட்டம் நடத்திய பெண் தொழிலாளர்களிடம் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அவர்களின் கோரிக்கை அரசு ஏற்றுகொள்ளவதாகவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தியதையடுத்து 16 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டது.