தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மாங்காட்டில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இதுக்கு மேல என்னால வாழ முடியாது… ரொம்ப வலிக்கிது… இந்த சமூகத்துல பாதுகாப்பே இல்ல… உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்கூடாது…பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை… அம்மா போயிட்டு வரேன்” என உருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன? இது அவர் எழுதிய கடிதம் தானா? என எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.