சென்னை:-
நுங்கம்பாக்கத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் வள்ளுவர் கோட்டம் அருகே வந்தபோது, காருக்குள் இருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பெண் கூச்சலிட்டதில், போலீஸார் காரை மடக்கிப்பிடித்தனர்.
அப்போது காரில் இருந்த 3 இளைஞர்கள், கூச்சலிட்ட பெண் மதுபோதையில் இருந்த நிலையில், இளைஞர்களில் ஒருவர் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது.
காரில் இருந்து இறங்குமாறு போலீஸ் கூறியபோது, மதுபோதையில் இளம்பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னனர் அந்த பெண் உட்பட 4 பேருமே அளவுக்கு அதிகமாக மது போதையில் இருப்பதால், அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர் விசாரணை அவர்களிடமும் நடந்து வருகிறது.