தமிழகம்

தண்ணீரில் குழந்தையை அமுக்கி கொலை செய்த தாய் கைது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையை தூய்மை பணியாளர் சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது கழிவறையில் இருந்த தண்ணீர் தொட்டி மேல் மூடி இல்லாமல் இருந்தது. அதற்குள் பெண் சிசு குழந்தை ஒன்று அமுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்தார் அவர்.

ALSO READ  தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு :

இதனை தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து டி.எஸ்.பி கபிலன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் பிராங்க்ளின் உள்ளிட்ட போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவில் பதிவான காட்சியில் நைட்டி அணிந்த பெண் ஒருவர் தலையில் குல்லா, மாஸ்க் அணிந்தபடி கழிவறைக்கு செல்வது பதிவாகியுள்ளது.

ALSO READ  மதுரை: தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

இந்நிலையில், குழந்தையை கொலை செய்த விவகாரத்தில், குழந்தையின் தாயான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியை சார்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், தகாத உறவு காரணமாக பிறந்த குழந்தையை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் :

naveen santhakumar

ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

News Editor

ரௌடி பேபி சூர்யா…….இதெல்லாம் உனக்கு தேவையா….?????

naveen santhakumar