வங்கிக் கணக்குகளை(bank account) ஆன்லைன் மோசக்காரர்களிடமிருந்து பாதுகாக்க மத்திய அரசு புதிய ஆலோசனை
ஆன் லைன்(online) மூலம் பணம் திருடும் கும்பல்களின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே வருகிறது. சிவிவி எண்களைக் கேட்பது, AUTO FILL OPTION BROWSER கள் மூலம் தரவுகளை திருடுவது, மின்னஞ்சல்கள் மூலம் உள் புகுவது போன்றவற்றின் மூலம் ஹைடெக்(hi-tech) திருட்டுகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சைபர் குற்றங்கள் தடுப்பு மற்றும் அவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மத்திய அரசின் ட்விட்டர் பக்கமான CYBER DOST ஒரு வழிமுறையை அறிவுரையாக கூறியுள்ளது.
அதில் எப்போதும் இரு மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.சமூக வலைதளங்களுக்கென்று ஒரு மின்னஞ்சல் முகவரியையும், நெருங்கிய உறவுகளுடன் பேசுவது மற்றும் வங்கிப் பரிவர்த்தணைகளுக்கு ஒரு தனி முகவரியையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது CYBER DOST.