மௌன்ட் எவரெஸ்ட்டில் பூமியிலிருந்து 1600 அடி உயரத்தில் சீனா 5ஜி நெட்வொர்க் தளத்தை அமைத்து வருகிறது. இதன் மூலமாக உலகிலேயே மிக உயரமான இடத்தில் மொபைல் சேவை நிறுவப்பட இருக்கிறது.
பீஜிங்:-
சீனாவைச் சேர்ந்த மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹுவாவே தனது 5ஜி நெட்வொர்க் தளத்தினை அமைக்க உள்ளது இதன் மூலமாக உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள மொபைல் சேவை வழங்கும் தளமாக உருவாக உள்ளது.
திபெத் நாட்டின் தன்னாட்சி பகுதியாக கருதப்படும் கோமோலங்மா (Qomolangma) பகுதியில் அமைந்துள்ள இமயமலைச் சிகரத்தில் இந்த 5G நெட்வொர்க் தளம் அமைய உள்ளது.
ஏற்கனவே இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 5300 மற்றும் 5500 அடி உயரத்தில் இரண்டு 5 ஜி நெட்வொர்க் ஸ்டேஷன்களை இந்நிறுவனம் அமைத்துள்ளது. இதன் மூலமாக உலகம் முழுவதிலும் இருந்து இமயமலையில் மலை ஏற்றத்திற்கு வரும் பயணிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப் பெருமளவில் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது மேலும் நேபால் மற்றும் சீனாவின் பல பகுதிகளில் தரமான மொபைல் சேவையை வழங்க முடியும்.
இந்தப் பகுதியில் மொபைல் நெட்வொர்க் தளத்தை அமைப்பது மிகவும் கடினமான பணியாகும் இதற்காக சீனா பெருமளவு நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.