தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தங்களது பக்கத்தில் உள்ள போலியான செய்திகளை கண்டறியும் பணியில் களமிறங்கியுள்ளது. பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்த பிறகு பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் போலியான செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்தது. இதன்மூலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் போலியான செய்திகள் குறித்து பயனாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் போலியான செய்திகள் மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் குறித்த குறியீடு வழங்கப்படும்.மேலும் ஏன் என்ற காரணத்தை விளக்குவதற்காக “See Why”, “See Post” என்ற வார்த்தைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதே தொழில்நுட்பம் ஏற்கனவே பேஸ்புக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.