5-வது வந்தே பாரத் ரயில் சென்னை – பெங்களூரு மற்றும் மைசூரு இடையே நவம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டிலேயே அதிக வேகமாக செல்லும் “வந்தே பாரத்” ரயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கக் கூடிய இந்த ரயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. பூஜ்யம் கி.மீ.இல் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடும். பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வந்தே பாரத் ரயில்கள் புது டெல்லி – ஸ்ரீ மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர் – மும்பை, புதுடெல்லி – வாரணாசி, மற்றும் அம்ப் அந்தாரா -புதுடெல்லி என 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்ற நிலையில், 5-வது வந்தே பாரத் ரயில் சேவை சென்னை – பெங்களூரு மற்றும் மைசூரு இடையே அடுத்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.