இந்தியாவில் வாட்ஸ் ஆப்(whats app) செயலி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த செயலி மூலம் பயனர்கள் புகைப்படம், வீடியோ, குறுஞ்செய்தி போன்ற பலவற்றினை பரிமாறி வருகின்றனர். தகவல் தொலைதொடர்பிற்கு பயன்படும் மிக முக்கிய செயலியாக திகழ்கிறது வாட்ஸ் ஆப்(whats app) . மேலும் அதிக அளவிலான பயனாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த செயலியில் மூன்று புதிய முக்கிய அம்ஸங்கள் வரவுள்ளதாக நிறுவனத்தின் CEO மார்க் ஸுகேர்பேர்க் தற்போது தெரிவித்துள்ளார்.
அந்த மூன்று அம்சங்களானது “குறுஞ்செய்தி காணாமல் போகும் வசதி, குறுஞ்செய்தியை ஒருமுறை மட்டும் பார்க்கும் வசதி மற்றும் ஒரே போன் நம்பரில் பயனர்கள் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப்(whats app) கணக்கினை பயன்படுத்துவது ஆகிய மூன்று அம்சங்களை அறிவித்துள்ளார். அதன்படி பயனாளர்கள் disappearing messages என்னும் ஆப்ஷனை ஆன் செய்த பிறகு ஒவ்வொரு 7 நாட்களுக்கு பின்பு பயனாளர்கள் அனுப்பிய செய்திகள் அனைத்தும் நீங்கிவிடும்.
இதனை தொடர்ந்து பயனாளர்கள் view once என்னும் ஆப்ஷனை ஆன் செய்தால் தங்களது நண்பருக்கு உறவினருக்கோ ஏதும் செய்தி அனுப்பினால், அந்த செய்தியை அவர்கள் ஒருமுறை பார்த்த பின்பு அதுவாகவே நீங்கிவிடும். மேலும் வாட்ஸ் ஆப்(whats app) நிறுவனம் அந்த செய்தியை ஸ்க்ரீன் ஷாட்(screenshot) செய்யும் நபர்களை கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மல்டி என்னும் அம்சமானது, பயனாளர்கள் தங்களது ஒரு நம்பரை வைத்து பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் கணக்கினை பயன்படுத்த முடியும் என்பது. இந்த மூன்று முக்கிய அம்சங்களும் தற்போது அதிக அளவில் பயனாளர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.