சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனோ வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்டுள்ளகொரோனோ கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை யும் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மேலும் இந்த வைரஸ் பரவ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டு வரும் வேளையில் தற்போது வவ்வால் சூப் தான் கொரோனோ வைரஸுக்கு காரணம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதன்முதலில் கொரோனோ வைரஸ் கண்டறியப்பட்ட வுகன் நகரில் வவ்வால் சூப் தான் புகழ் பெற்றது.கொரோனோ வைரஸ் வவ்வால் களில் காணப்படும் ஒருவித வைரஸ் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இளம்பெண் ஒருவர் வவ்வால் சூப் குடிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த புதிய வைரஸின் தாக்குதல் இவ்வளவு தூரம் இருக்கும் என மருத்துவர்கள் நினைக்கவில்லை. இதனை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.