இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொள்ளை என உலக அரங்கில் ஒரு சம்பவத்தில் இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கையில் ஐரோப்பிய அரசு ஈடுபட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பால் மோரா, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் ஷீர் ஷீட்ல்ஸ் என்ற இரு வங்கி ஊழியர்கள்
cum-ex என்ற வர்த்தக நிறுவனம் மூலம் ஐரோப்பிய அரசாங்கத்தின் கஜானாவில் மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தினர்.
அங்கு மட்டுமின்றி பிரான்ஸ் இத்தாலி, பெல்ஜியம் ஆஸ்திரேலியா நார்வே பின்லாந்து ஆகிய நாடுகளிலும் இவர்கள் அரசாங்கத்தை ஏமாற்றி உள்ளனர்.
இவர்கள் இருவரும் மற்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்கு உதவி புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவர்கள் இருவரும் அரசாங்கத்தை ஏமாற்றி சுமார் 30 பில்லியன் டாலர் அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளனர்.
முதலில் ஜெர்மனி போலீசாரிடம் மார்ட்டின் ஷீட்ல்ஸ் கைது செய்யப்பட்டார் ஆனால் பால் மோரா நியூஸிலாந்துக்கு தப்பி சென்றுவிட கடந்த டிசம்பர் மாதம் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் வழக்கம் போல இருவரும் தாங்கள் குற்றம் செய்யவில்லை என கூறியுள்ளனர்.
அதேசமயம் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பல மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.