ஆஸ்திரேலியாவில் இரண்டு வயது குழந்தையின் உதட்டில் முத்தமிட்ட இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டார்லிங் துறைமுக நகரை சார்ந்த “SEA LIFE” அருங்காட்சியகத்தில் 28 வயது இந்திய இளைஞர் தான் இந்த செயலில் ஈடுபட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன
குழந்தையின் பெற்றோர் அவனை தள்ளிவிடும் முன் குழந்தையின் உதட்டில் முத்தமிட்டான் என்றும் அவனுக்கும் குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்ப்பட்ட இளைஞன் டே ஸ்டீரிட் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவன் மீது 10 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்ட அவனுக்கு பிணை அளிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.