இலங்கையின் மருத்துவமனை ஒன்றில் ஆண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இலங்கையிலுள்ள மாத்தறை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் வயிறு வலி என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த இளைஞருக்கு ஒருவர் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனால் அந்த இளைஞரை பற்றி விசாரணை நடத்தப்பட்டத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அவர் ஒரு ஆண் அல்ல. ஆணின் பெயரைக் கொண்ட இவர் பெண் ஆவார். ஆண்களுக்குரிய தோரணையில் வலம் வந்த அந்த பெண்ணை சோதனை செய்த போது அவரின் அடையாள அட்டைகள் அனைத்திலும் ஆணின் பெயர் இடம்பெற்றிருந்தது.
பின்னர் பெண்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையை ஏற்பட்டுள்ளது . இதற்கு காரணம் அந்த பெண் தனது மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கொண்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.