தமிழ்சினிமாவில் கதாநாயகியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்தவர் கஸ்தூரி.தற்போது அரசியல் சார்ந்த கருத்துக்களை டுவிட்டரில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ட்விட்டரில் சர்ச்சையை அதிகம் கிளப்பும் நாயகியாக வலம் வருகிறார்.
நேரடியாக அரசியல் தலைவர்களை தாக்குவது, முன்னணி நடிகர்களுக்கு எதிராக கருத்து பதிவிடுவது என அரசியல்வாதிகளையும் ரசிகர்களையும் பகைத்துக் கொண்டு வருகிறார் கஸ்தூரி. அந்த வகையில் சமீபத்தில் தல அஜித் ரசிகர்கள், கஸ்தூரியை பற்றி ஆபாசமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வந்துள்ளனர்.
Kasturi Shankar✔@KasthuriShankar உங்கம்மா பேருதானே, அதுதான் தெரியுமே.69012:52 PM – Jan 20, 2020Twitter Ads info and privacy333 people are talking about this
இதனை கண்டித்து கஸ்தூரி நேரடியாக அஜித் உங்க ரசிகர்களை கட்டுப்படுத்துங்கள் என அறிவுறுத்தினார். அதன் உச்சகட்டமாக #DirtyKasturiAunty #dirtyAjithFans போன்ற ஹாஸ்டாக்குகள் ஏற்பட்ட சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் பலரின் அறிவுரையின் அடிப்படையில் கஸ்தூரி, சைபர் கிரைமில் அஜித் ரசிகர்களை பற்றி புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக தவறாகப் மற்றும் ஆபாசமாக பதிவிட்ட அஜித் ரசிகர்களின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதன் அடிப்படையில் சுமார் 10க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.