உலகம்

கணினிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக அளவில் மக்களின் சுகாதாரத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ், தற்போது கணினிப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

உலகநாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சத்தில் உள்ளன. இதனால் சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்தும், அதிலிருந்து மக்கள் எப்படித் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பகிரப்படும் தகவல்கள் அனைத்தையும் மக்கள் உடனே பதிவிறக்கம் செய்துவிடுகின்றனர்.

மக்களின் இந்த அச்சத்தைப் பயன்படுத்தி சிலர் புதிய விதமான கணினி வைரஸ்களைப் பரப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் உலவும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்த file-களில் மறைந்திருக்கும் இந்த வைரஸ்கள், அந்த file-களை பதிவிறக்கம் செய்யும் போது, நமது கைபேசிகளிலும் கணினிகளிலும் நுழைந்துவிடுகின்றன.

ALSO READ  டாங்கன்யிகா ஏரியில் படகு விபத்து -11 பேர் நீரில் மூழ்கி பலி

பின்னர் இவை நமது கணினியில் உள்ள தகவல்களை மூன்றாம் நபருக்கு அனுப்பவோ, அழிக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ செய்கின்றன. இதனால் அந்தரங்கத் தகவல்கள், வங்கி விவரங்கள் போன்றவை தவறான நபர்களிடம் சிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.

இது குறித்து பிரபல கணினிபாதுகாப்பு மென்பொருள் சேவை நிறுவனமான ‘Kaspersky’ எச்சரிக்கை விடுத்து உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகிலேயே இந்த நாட்டில் மட்டும் தான் ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லையாம்… எந்த நாடு தெரியுமா???

naveen santhakumar

மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிக்கொண்டு நாட்டை விட்டு ஓடிய அதிபர் :

Shobika

அர்ஜென்டினாவில் பயங்கர நிலநடுக்கம்……ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு :

naveen santhakumar