தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பமானது முதல் அந்நாட்டு மருத்துவர்கள் ஆற்றிவரும் பணிகள் சொல்லிமாளாத அளவிற்கு நெகிழ்ச்சியடைய செய்தது.
மக்களை மீட்க முடியாத சோகம், குடும்பத்தினருடனான பிரிவு, பச்சிளம் குழந்தையை எண்ணி அழுவது போன்ற பல வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.
இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
சொங்யின் ஜீ என்ற 27 வயது மருத்துவர் தொடர்ச்சியாக 10 நாட்கள் மருத்துவ பணியாற்றி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிய வந்தது. இது சீன மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.