தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்திலுள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்திலுள்ள 5300 டாஸ்மாக் கடைகளில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் ரூ.31,500 கோடி ரூபாய் வருவாய் தமிழக அரசிற்கு கிடைத்தது.
இந்நிலையில் அனைத்து மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. இதனால் குடிமகன்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினமே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
அதன்படி குவார்ட்டர் பாட்டில்களுக்கு ரூ.10ம், ஆஃப் ரூ.20யும் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் பீர் மதுபானங்களின் விலை ரூ.10 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.