வடகொரியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இருக்கும் என்று சந்தேகிகப்பட்ட நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் திணறி வருகின்றன. இதற்கு 1370க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வடகொரிய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபரை சுட்டுக்கொலை செய்துள்ளது.
சமீபத்தில் சீனாவுக்கு சென்று வந்த வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் அந்நாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.
மேலும் அந்த நபர் வடகொரியாவின் பொது இடத்தில் உள்ள குளியலறைக்கு சென்றதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொரோனா பரவும் என முடிவு செய்த அதிகாரிகள் வியாபாரியை சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.