இந்தோனேசியாவில் தாயின் மருத்துவச் செலவுகளுக்காக பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு வென்ற சிறுமியை, நேரலையில் பார்த்தபடியே அவரது தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் லிகா தங்தத் (Liga Dangdut) என்ற பாடல் போட்டி நடந்தது. இதில் வென்றவர்களுக்கு 26 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜன்னா என்ற 14 வயது சிறுமி, உயிருக்குப் போராடும் தனது தாயை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக லிகா தங்தத் போட்டியில் பங்கேற்றார். தனது தாயை நினைத்தபடியே உருக்கமாகப் பாடி அனைவரையும் அசத்தினார். வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதியானார்.
இறுதி போட்டிக்கான பாடலை ஜன்னா உருக்கமுடன் மேடையில் பாடினார். அவரது பாடலை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஜன்னாவின் தாய் கண்ணீருடன் கேட்ட சிறிதுநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
தகவலைக் கேட்ட ஜன்னா மேடையிலேயே கதறி அழுதார். இதனைக் கண்டு அரங்கில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டனர்.
நேரலையில் டிவி.,யில் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் இது சோகத்தில் ஆழ்த்தியது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.